மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி DA உயர்வு 3% – விரைவில் அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022ம் ஆண்டுக்கான முதல் தவணை அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய முக்கிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை என்ற இரண்டு தவணைகளில் உயர்த்தப்படுகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் DA உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 ஜூலை நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனுடன் தொடர்புடைய மற்ற படிகளும் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால், அவர்களின் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் உயரும். இருப்பினும், அகவிலைப்படி வ்வளவு உயர்த்தப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. நவம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி 2 முதல் 3% வரை DA அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (ஜன.19) முதல் பள்ளிகள் வழக்கம் போல திறப்பு – கல்வித்துறை உத்தரவு!
ஜனவரியில் டிஏ 2% முதல் 3% வரை அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை டிஏ கிடைக்கத் தொடங்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். மத்திய அரசு முன்னதாக அறிவித்துள்ள படி 2022பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பொருத்துதல் காரணி பற்றிய முடிவு எடுக்கப்படும். இதனால் ஊழியர்களின் அடைப்படை சம்பளம் உயர்த்தப்படும். அகவிலைப்படியை 3% அதிகரித்த பிறகு, மொத்த DA 34% ஆகவும், இதனால் ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். ஆனால் சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.
ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷ் – 18 வருட காதல் திருமண வாழ்க்கை முறிவு! ரசிகர்கள் ஷாக்!
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) ரூ.5580/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (34%) ரூ 19346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) ரூ 17639/மாதம்
4. மாதம் எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது =19346-17639 = ரூ. 1,707/
5. ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484