ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – ரயில்வே வாரியம் எச்சரிக்கை!
இந்தியாவில் ரயில் பயணிகளுக்கான IRCTC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்கு இடமான அழைப்புகளை நம்பி எந்த தகவலும் அளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தகவலை கீழே உள்ள பதிவில் காண்போம்.
இந்தியன் ரயில்வே:
இந்தியாவில் உள்ள சாமானிய மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் ரயில்வே துறை மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ரயில்வே துறை பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ரயில் பயணிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக ரயில் டிக்கெட்டை ரத்து செய்திருந்தாலோ அல்லது ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருந்தாலோ பணத்தை திரும்ப பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. தற்போது ரயில்வே நிர்வாகம் எளிமையாக பணத்தை திரும்ப பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது IRCTC ipay ஆப் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்ட உடன் அதன் ரீஃபண்ட் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு நடைமுறை பிரச்சனைகள் இருப்பதாகவும், பல மோசடிகள் நடைபெறுவதாகவும் வாடிக்கையாளர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகின்றனர். மேலும் டெபிட் , கிரெட் கார்டு, யுபிஐ ஸ்கேன் கோடு அனுப்புங்கள் பணத்தை திரும்ப செலுத்துகிறோம் என்று வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வந்த நிலையில் பலர் ஏமாந்து உள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் கடைகளில் சிசிடிவி கேமரா!
இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் UPI பயன்படுத்தி பயனாளர்களிடம் நிதி மோசடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இது போன்ற சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் வரும் பட்சத்தில் அதனை நம்பி எந்த தகவலையும் தெரிவிக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ளது. மேலும் ரயில்வே பணத்தை திரும்ப செலுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப் படமாட்டார்கள் என்றும் ஐஆர்சிடிசி அல்லது அதன் ஊழியர்கள் பணத்தை திரும்ப வழங்கும் செயறையில் உங்களை தொலைபேசி வாயிலாக அழைக்க மாட்டார்கள் என்றும் டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு எண்/OTP/ATM பின்/CVV எண் அல்லது பான் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களை கேட்க மாட்டார்கள் என்றும் ரயில்வே வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.