ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல தற்போது அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சில முக்கிய அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சில ரயில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்:
கேரளாவில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அம்மாநிலத்தை சிறப்பாக ஆண்டு வந்த மகாபலி மன்னரின் நினைவு நாளாகவும், நாட்டிற்கு வருகை புரியும் மன்னரை வரவேற்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்படும். இப்பண்டிகை கேரளா மட்டுமில்லாது தென் தமிழக மக்களும் விமர்சையாக கொண்டாடுவர். எனவே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படவில்லை. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் மக்கள் ஓணம் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாட ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் ஓணம் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு 8 ஜோடி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தாம்பரத்தில் இருந்து எழும்பூர், பெரம்பூர், காட்பாடி, சேலம், கோவை, பாலக்காடு, திரூர் வழியாக மங்களூருவுக்கு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 4ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு உத்தரவு!
அதனை தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலுவா, கோவை, சேலம், காட்பாடி வழியாக எழும்பூருக்கு செப்டம்பர் 11-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை – லோகமான்ய திலக் விரைவு ரயில் இன்று காலை 8.50 மணிக்கு பதில் மாலை 6.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நல்லது. ஆனால் ஒரு மாதம் முன்பு அறிவித்தது இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.