தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு உத்தரவு!
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்றவைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதே போல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ள நிலையில் மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி கல்வித்துறைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்கள், சமையல் கூடங்கள், கழிவறைகள் போன்றவைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்று கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து பள்ளி பேருந்துகளில் புதிய வசதி அறிமுகம் – அரசாணை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சரியான பராமரிப்பு இல்லாத பள்ளிகளுக்கு அபராதம் விதித்து பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தவிர பல தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளிலும் அவ்வப்போது பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு அங்கீகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pls visit all schools