தமிழகத்தில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற விண்ணப்பித்து 4 நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அல்லது அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்றவை பெற மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் கட்டாயமாகும். இவற்றை பெற தாலுகா அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். அதற்கு மாற்று வழியாக ஆன்லைன் மூலமாக சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் விண்ணப்பிக்கும் இணையதளத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக எளிதாக சான்றிதழ் பெறலாம்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை ஆணையர்!
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 300 ஒய்வூதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், உங்களது தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறோம் என தெரிவித்தார்.
இந்தியாவில் ஒரே நாளில் 41,649 பேருக்கு கொரோனா – 593 பேர் உயிரிழப்பு!
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெற விண்ணப்பித்தால் அதனை 4 நாட்களுக்குள் வழங்க வேண்டும். 4 நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அல்லது அமைச்சரிடமும் நேரில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் முதியோர் உதவித் தொகையை விரைவில் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.