இந்தியாவில் ஒரே நாளில் 41,649 பேருக்கு கொரோனா – 593 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,649 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 593 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகள் நோய் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஊரடங்குகளையும், கட்டுபாடுகளையும் அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை பிறப்பித்தது. நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி மக்களை வாட்டி வதைத்தது. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது.
9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, பேருந்துகள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை இந்தியாவில் 46,15,18,479 பேருக்கு கொரோனா தாதுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 52,99,036 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் பொருட்கள் விநியோகம்!
இதுவரை மொத்த பாதிப்புகள் 3,16,13,993 ஆக உள்ளது. இது நேற்றைய பாதிப்புகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 593 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,23,810 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து 37,291 கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை நாட்டில் 3,07,81,263 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,920 பேர் மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.