தமிழக ஆசிரியர்கள் & மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் தங்களின் கையெழுத்தை தமிழ் மொழியில் இடவேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தற்போது சுட்டி காட்டி பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழில் கையெழுத்து
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மிதமான விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதாவது, முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை என அனைத்து அரசு அலுவலர்களும் தங்களின் கையெழுத்தையும் மற்றும் முன்னெழுத்துகளையும் தமிழ் மொழியில் இடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் அரசு வெளியிடும் ஆணைகளிலும், ஆவணங்களிலும் குறிப்பிடப்படும் பெயர்களும் தமிழில் இருக்க வேண்டும்.
இதே போல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களின் பெயர்களை தமிழ் மொழியிலே இட வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தமிழ் மொழியில் மாணவர்களின் சேர்க்கை விண்ணப்பம், வருகைப்பதிவேடு, சான்றிதழ் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது இதனை சுட்டிகாட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை: தங்கம் வாங்க இது தான் சரியான தருணம் – இன்று அதிரடியாய் குறைந்த விலை!
இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பதிவுகளிலும் மாணவர்களின் பெயர்களை தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்