பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அமைச்சர் தகவல்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார சரிவு காரணமாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது அதானல் மக்கள் அன்றாட செலவுளை சரி செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அந்நாட்டு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிபர் ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு மத்தியில் ரணில் விக்கிரம சிங்க இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது.
தற்போது ஓரளவு நிலைமை சீராகி வந்துள்ளதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாரத்தின் 5 நாட்களும் வகுப்புகளை நடத்த உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிகள் சென்று வருவதில் போக்குவரத்து பிரச்சனைகள் ஏதும் இல்லை. அவ்வாறு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை போக்குவரத்துறையிடம் கலந்துரையாடி தீர்வு காணப்படும்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 % உயர்வு – சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தற்போது கொரோனா பாதிப்புகளும் குறைந்து வருவதால் சுகாதாரத்துறை அமைச்சகம் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை அதனால் டிசம்பர் வரை வாரத்தில் 5 நாட்களும் வகுப்புகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினால் அதன்படி அதனை பள்ளிகள் கடைபிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்