அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 % உயர்வு – சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது சத்தீஸ்கர் அரசு அகவிலைப்படி உயர்வினை வழங்கியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 7வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையிலும், 6வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் முதல் 189 சதவீதம் வரையிலும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – ஊக்கத்தொகை நிறுத்தம்? வலுக்கும் கோரிக்கை!
இதற்கு முன்பு மாநில அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் 22 சதவீத அகவிலைப்படியும், 7வது ஊதியக் குழுவின் கீழ் 174 சதவீத அகவிலைப்படியும் பெற்று வருகின்றனர். மேலும், சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் எனவும், சிறப்பு கொடுப்பனவு மற்றும் தனிப்பட்ட கொடுப்பனவை சேர்க்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 3.8 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த மாதம் மாநில அரசு ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பின்பு மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று சத்தீஸ்கர் அரசு அகவிலைப்படி உயர்னை வழங்கியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்