ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து தனது ஓய்வூதிய பணத்தை பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது வாழ்நாள் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்றிதல்:
அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அரசு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்கி வருகிறது. ஓய்வூதியதாரர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு முக்கிய சான்றாக வாழ்நாள் சான்றிதழ் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை அரசுக்கு சமர்ப்பித்தால் மட்டுமே அரசிடமிருந்து பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி வாழ்நாள் சான்றிதழ்களை அரசு பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்கும்படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓய்வூதியதாரர் ஜீவன் பிரமான் இணையதளம் (https://jeevanpramaan.gov.in/
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு – மதிப்பெண்களை தெரிந்து கொள்வது எப்படி?
இது மட்டுமல்லாமல் இ சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலமாகவும் ஓய்வூதியதாரர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் சங்கத்தின் மூலமாகவும் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். மேலும் வாழ்நாள் சான்றிதழ்களைப் பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், P.P.O. No, வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த பிறகு www.tn.gov.in/karuvoolam/ என்கிற இணையதள முகவரியின் மூலமாக வாழ்நாள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து வங்கியின் கிளை மேலாளர், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையெப்பம் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.