மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – DA நிலுவைத்தொகை எப்போது கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கினாலும் 18 மாத கால நிலுவைத்தொகை வழங்கப்படாமலே உள்ளது. தற்போது DA நிலுவைத்தொகையை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
DA நிலுவைத்தொகை:
கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை அரசு ரத்து செய்தது. ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில் தான் 28% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 31% ஆக இருந்தது. தற்போது மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக உள்ளது. ஆனால், இந்த கொரோனா காலத்தில் இருந்தே ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. அதாவது , ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான DA நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது.
மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து வீட்டிற்கு ஓடி வரும் கதிர் – பார்க்க விடாமல் தடுக்கும் தனம்!
இதனால் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளுக்காக அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இதன்படி அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்து, அரசுக்கும் அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கின்றனர். அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கிய போது கூட 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வழங்கவில்லை.
இந்நிலையில், 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை மூன்று தவணையாக வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. சில ஊடகங்கள் விரைவில் நிலுவை தொகை கிடைக்க போகிறது என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால நிலுவை தொகையை வழங்க வாய்ப்பே கிடையாது என கூறப்படுகிறது. நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது எனவும், 18 மாத கால நிலுவை தொகையை வழங்குவது பரிசீலனையில் இல்லை எனவும் அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.