ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மீறினால் ரூ.1000 கட்டணம்!
இந்தியாவில் முக்கிய ஆவணங்களான ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை இணைக்க காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் எண்ணை இணைக்க கட்டணம் செலுத்த வேண்டும்
ஆதார் – பான் இணைப்பு:
இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். அரசின் நலத் திட்டங்களில் இணையவும் , வங்கி கணக்கு தொடங்கவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாருக்கு அடுத்த நிலையில் முக்கிய ஆவணமாக பான் கார்டு விளங்குகிறது. இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கபடுகிறது. இந்த ஆதாரை நாம் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். அதற்கான வசதியை UIDAI அமைப்பு நமக்கு வழங்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
ஆதாரை தொடர்ந்து பான் கார்டு அனைத்து வங்கி சார்ந்த வேலைகளுக்கும் பயன்படுகிறது. 10 இலக்க எண்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் பான்கார்டு ஆகும். வருமானவரி தாக்கல் செய்யும்போதும், ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணபரிவர்த்தனைகளை செய்யும் போதும் பான் கார்டு அவசியமாகிறது. இந்தியாவில் நடைபெறும் வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் – பான் இணைக்க மார்ச் 31ம் தேதி காலக்கெடுவும் வழங்கப்பட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC லக்கேஜ் விதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு !
அதற்கு பிறகு பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால் உங்களிடமிருந்து ரூ.500 வசூலிக்கப்படும். மேலும் ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு பான்-ஆதார் இணைத்தால் இரு மடங்கு அதாவது ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க பான் எண் ஆகியவற்றை மொபைலில் டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ஆதார் – பான் எண்ணை இணைக்கலாம். அல்லது Income Tax e-filin என்ற இணையதளம் வாயிலாகவும் ஆதார் பான் எண்ணை இணைக்கலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்