ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டை இணைக்க கடைசி நாள் நீட்டிப்பு!
அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் தடையின்றி பெற விரும்பினால் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். அப்படி இணைக்காத ரேஷன் அட்டைதாரர்களை ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன், ஆதார் இணைப்பு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டுகள் அவசியமான ஒன்றாகிவிட்டது. ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகளும் சலுகைகளும் வந்துகொண்டே தான் இருக்கிறது. அதே போல ரேஷன் கார்டுகளில் மோசடிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
TN TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!
இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். அவ்வப்போது ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 31 வரை இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காத காரணத்தினால் மீண்டும் ஜூன் 30 ஆம் தேதி வரை இணைத்துக்கொள்ளலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க UIDAI இணையதள முகவரியிலேயே சென்று இணைத்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் கவனத்திற்கு – ஹாப்பி நியூஸ்!
முதலில் uidai.gov.in. என்கிற இணையதள முகவரிக்கு சென்று Start Now பட்டனை கிளிக் செய்யவும். இதன் பின்பு வீட்டு முகவரி, மாவட்டம், மாநிலம் என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பிறகு Ration Card Benefit என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் நம்பர், ரேஷன் கார்டு நம்பர், ஈ-மெயில் ஐடி, மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்பு பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அந்த OTP எண்ணை பதிவு செய்துவிட்டால் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்துவிடலாம்.