தமிழக பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நிறுத்தம்? முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகமே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து வந்தது. இந்த முறை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாற்று முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வழிமுறையை அரசு கொன்டு வந்தது. அதனை மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்கவில்லை என்பது தெரிய வந்தது. அதனால் அரசு வேலை வாய்ப்பை புதுப்பிக்காதவர்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கியது.
நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் தாங்களாகவே நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அண்மையில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் விரைந்து வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
V.O.சிதம்பரம் கல்லூரியில் வேலை – 49 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்கள்
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எதிர் காலத்தில் பயன் தரும் ஒன்றாக உள்ளது. தற்போது வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தங்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்