TNPSC குரூப் 4 & VAO தேர்வர்களுக்கான முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. சுமார் 18.50 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இவர்கள் தற்போது தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022ம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 7382 பணியிடங்களை கொண்ட இத்தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்மொழி தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டது.
இதில் வினாக்கள் மிக எளிதாக இருந்தாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். தேர்வு முடிவடைந்ததை அடுத்து உத்தேச விடை குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த விடைக்குறிப்பில் ஆட்சேபனை இருந்தால் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் தெரிவிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது தேர்வு முடிவடைந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் மாறுதல் பெற்ற அரசு ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு – தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!
இந்த நிலையில் குரூப்4&VAO தேர்வின் முடிவுகள் அக்டோபர் 2- வது வாரத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற குரூப் 2,2A முதல் நிலை தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் குரூப் 2 தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் இந்த தேர்வின் முடிவை பொறுத்து தான் முதன்மை தேர்வுக்கு தேர்வர்கள் தயாராக முடியும். அதாவது இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே குரூப் 2 முதன்மை தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்