தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய தகவல் – ஆட்சியர் உத்தரவு!

0
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய தகவல் - ஆட்சியர் உத்தரவு!
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய தகவல் - ஆட்சியர் உத்தரவு!
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய தகவல் – ஆட்சியர் உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்காலம் முடிந்த பின் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் சான்றிதழ்:

தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியகாலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் நேர்காணல் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நேர்காணலில் கலந்து கொள்ளாதவர்கள் நேரடியாக கருவூலத்துக்கு வராமல், ஜீவன் பிரமான் இணைய தளம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்று சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கி மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே தபால் துறை பணியாளர் மூலம் ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் முக்கிய அறிவிப்பு!

அது மட்டுமில்லாமல் இ-சேவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தில் பயோமெட்ரிக் கருவி மூலம் பங்கேற்கலாம். அவ்வாறு பங்கேற்கும் போது ஆதார் கார்டு எண், பி.பி.ஓ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலக விவரத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் www.tn.gov.in/karuvoolam/ என்ற இணைய முகவரி மூலமாக படிவத்தை பதிவிறக்கம் செய்து அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலர், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கையெழுத்து பெற அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்போர் தூதரக அலுவலர், மாஜிஸ்ட்ரேட், நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்று அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவூலத்துக்கு நேரடியாக வர விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் வந்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!