தமிழக பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழக பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் பொதுத்தேர்வுகளும் 2 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. ஜூன் 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வழக்கமாக 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்கப்படும் ஆனால் இந்த ஆண்டு இது குறித்த புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
அதாவது, வழக்கமாக பள்ளிகளில் ஆண்டுதோறும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 10 ஆம் வகுப்பு மதிப்பெண் மாணவர் சேர்க்கை அடிப்படையில் வழங்கப்படும் ஆனால் தற்போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களை விட அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளிலும் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் தற்போது இடஒதுக்கீடு முறை சாத்தியமில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.