மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம்
பிறப்பு:
- ஜூலை 2,1958ல் தமிழ்நாட்டில் பிறந்தார்.
சிறப்பு:
- தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர். தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிகிறார்.
- இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர்.
- அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.
- இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
- இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் “கையருகே நிலா” என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள்,சந்திரயான் பணி ஆகியவை அடங்கும் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
- இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில் “கையருகே செவ்வாய்” என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.
- தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.
- இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- ‘வளரும் அறிவியல்’ என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர்.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர்,கவிஞர், கட்டுரையாளர்.
விருதுகள்:
மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்.
- கர்மவீரர் காமராஜர் நினைவு விருது
- பத்ம ஸ்ரீ விருது 2016, இந்தியாவில் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றாகும்.
- நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்
- சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்
- ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது
- சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல் விருது
- ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது
- கர்நாடக மாநிலஅரசின் அறிவியலுக்கான விருது
- எச்.கே..ப்ரோடிய தேசிய அறிவியல் விருது
- தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது
- ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது
- அமர பாரதி தேசிய அறிவியல் விருது
- தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது
- கொங்குச் சாதனையாளர் விருது
- தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம்
- அறிவியல் அண்ணா, கர்நாடகா தமிழ்பேரவை, ஹுப்ளி
- டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012
- சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013
நிகழ்வுகள்
- 1698 – தாமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1853 – ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது.கிரிமியப் போர் ஆரம்பமானது.
- 1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
- 2004 – ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
- 1578 – மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
பிறப்புகள்
- 1862 – வில்லியம் ஹென்றி பிராக் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர்.
- 1877 – ஹேர்மன் ஹெசே நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி எழுத்தாளர்.
- 1925 – பத்திரிசு லுமும்பா கொங்கோவின் 1வது அரசுத்தலைவர்.
- 1946 – ரிச்சார்ட் ஆக்செல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
இறப்புகள்
- 1757 – சிராச் உத் தவ்லா வங்காளத்தின் கடைசி நவாப்
- 1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்