TNPSC 7382 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – Group 4 தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பாடத்திட்டம், தேர்வு முறை, கல்வித்தகுதி போன்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO:
தமிழக அரசின் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் தமிழ்நாடு நீதி அமைச்சு பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலக பணி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணி ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகிறது. இந்த குரூப் 4 & VAO தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.
Exams Daily Mobile App Download
இந்த வருடம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதாவது 7,382 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் படி நிரப்பப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. கடந்த 28ம் தேதியுடன் விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. இத்தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு – காவல்துறை நடவடிக்கை!
தேர்வில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தமிழ் மொழித்தேர்வு மதிப்பெண்கள் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப்பகுதியை தெளிவாக படிக்க வேண்டும். குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் தேர்வில் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். தமிழ் மொழிப் பாடப்பகுதியைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு பாடத்தரத்தில் கேள்விகள் இடம்பெறும். தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். மேலும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களை படித்து வைத்து கொள்வது நல்லது.