தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு – காவல்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அரசு பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் ஒரு சில அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இனிமேல் அப்படி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மாணவர்கள் மீது நடவடிக்கை:
கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் மத்தியில் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் மேஜைகளை அடித்து நொறுக்குவதும், ஒருவருக்கு ஒருவர் கேட்ட வார்த்தைகளால் திட்டி சண்டை போடுவதும், ராக்கிங் செய்வதும், பள்ளி உடமைகளை சேதப்படுவது என பல செயல்களை செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் ஆசிரியர்களை தரைகுறைவாக பேசுவதும், அவர்களை தாக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் நடத்துனரின் கட்டுப்பாடுகளுக்கு இனங்காமல் பல ஒழுங்கீனமான செயல்களை செய்து வருவதாக தினசரி புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. பச்சையப்பாஸ், நியூ காலேஜ் மற்றும் சைதாப்பேட்டை கல்லூரி மாணவர்கள் மீது அடிக்கடி புகார் வருகிறது.
அதனால் காவல்துறை அது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வரும் புகார்களை விசாரித்து பார்த்தால் மாணவர்கள் மீது தான் புகார் இருப்பதாக தெரிகிறது. மேலும் நடத்துனர்கள் மாணவர்களை ஒழுக்கமாக இருக்க சொல்ல அவர்கள் கேட்காமல் இருக்கின்றனர். அதனால் அடுத்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே இது குறித்த ரூல்ஸ் இருக்கிறது. அதில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கண்டிக்க சொல்லி அனுப்புவோம். ஆனால் இப்போது அப்படி இல்லாமல் புகார் அதிகமாக இருப்பதால் கேஸ் மேலிடத்திற்கு மாற்றப்படும் என எச்சரித்துள்ளார்.