TN TRB 3000 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வாகும் ஆசிரியர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது 9 மாவட்டங்களில் 3000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனம்:
தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அதே போல இந்தாண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த உள்ளது. ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக தேர்வான ஆசிரியர்களுக்கும் இன்னும் பணியிடங்கள் வழங்கப்படாமலே உள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
Exams Daily Mobile App Download
அதாவது 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பணியிடங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டில் இருந்தே எந்த ஆசிரியர்களும் பணியிடங்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது தான் தமிழகத்தில் கொரோனாவில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் எந்த பள்ளியும் திறக்கப்படவில்லை. கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
மே 1 முதல் அடுத்த 60 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில கூடுதல் நீதிபதி அறிவிப்பு!
இதனால் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்க தமிழக அரசு சில மாதங்களாகவே நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், 9 மாவட்டங்களில் 3000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஆசிரியர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 3000 பணியிடங்களும் தொடர்ந்து நிர்வாகம் பயன்பாட்டில் இருக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.