மே 1 முதல் அடுத்த 60 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில கூடுதல் நீதிபதி அறிவிப்பு!
நாகாலாந்து மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள சிவசாகர் மாவட்டத்தில், மே 1 இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை அமலுக்கு வரும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்து மாநில கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இரவு ஊரடங்கு
இந்தியாவில் கடந்த ஒரு சில மாதங்களாக கர்நாடகா, அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறைகள் வெடித்து வருகிறது. இந்த வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டதை போல மீண்டுமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நாகலாந்து மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள சிவசாகர் மாவட்டத்தில் மே 1 இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை அமலுக்கு வரும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? பெற்றோர்கள் வலியுறுத்தல்!
அதாவது நாகாலாந்து மாநில எல்லையான சிவசாகர் மாவட்டத்தில் மே 1 முதல் 60 நாட்களுக்கு அமலுக்கு வரும் வகையில், தினசரி இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அசாம் மாநில கூடுதல் மாவட்ட நீதிபதி (ADM) சிவசாகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சிவசாகர் மாவட்டத்தின் பெல்ட்டில் உள்ள அசாம் மற்றும் நாகாலாந்து எல்லையில் சமூக விரோதிகள், தீவிரவாதிகள், சட்டவிரோத செயல்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த இரவு ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள காலத்தில் எந்த ஒரு நபர், நபர்கள் அல்லது குழுவும் நடமாடுவதற்கு தடை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஊரடங்கு காலங்களில் மாஜிஸ்திரேட், ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறையின் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் அதிகாரிகள் ஆகியோருக்கு தடை உத்தரவின் வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.