பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? பெற்றோர்கள் வலியுறுத்தல்!
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வழக்குகள் 5% என்ற அளவை தாண்டினால், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என 63% பெற்றோர்கள் வலியுறுத்தி இருப்பதாக ஆய்வு கணக்கெடுப்பு கூறுகிறது.
ஆன்லைன் வகுப்புகள்
இந்தியாவில் கடந்த ஒரு சில வாரமாக கொரோனா புதிய பாதிப்புகளின் விகிதம் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் ஊடகங்களில் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வழக்குகள் 5 சதவீதத்தை தாண்டினால், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை துவங்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி இருப்பதாக கணக்கெடுப்பு கூறியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்தியாவில் சுமார் 314 மாவட்டங்களில் உள்ள உள்ளூர் வட்டங்களை சேர்ந்த 23,500 மக்களிடமிருந்து ஆன்லைன் தளம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேர் ஆண்கள், 38 சதவீதம் பேர் பெண்கள் என்று தரவுகள் கூறுகிறது. இப்போது இந்த சமீபத்திய கணக்கெடுப்பு அளித்த விவரங்களின்படி, ஒரு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை நேர்மறை விகிதம் 2 சதவீதத்தைத் தாண்டியவுடன், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று 27 சதவீத பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் PM KISAN திட்டம் – 11வது தவணை பெற இது கட்டாயம்! எளிய வழிமுறைகள் இதோ!
மேலும், 63 சதவீத பெற்றோர்கள், மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்தைத் தாண்டினால் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் அதிகபட்சமாக 63 சதவீத பெற்றோர்கள், தற்போதைய நோய்த்தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு கற்றல் செயல்முறை பாதிக்கப்படாமல் இருக்க மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இப்போது கணக்கெடுக்கப்பட்ட பெற்றோர்களில் 34 சதவீதம் பேர் மட்டுமே முழு அட்டவணையில் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு ஆதரவாக பதிலளித்துள்ளனர்.
மற்ற 34 சதவிகிதத்தினர் உட்புற மதிய உணவு மற்றும் சிற்றுண்டி இடைவேளை இல்லாமல் பள்ளிகளை குறுகிய காலத்தில் நடத்துமாறு பரிந்துரைத்துள்ளனர். தவிர, 29 சதவீத பெற்றோர்கள் மாவட்ட TPR 5 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நேரடி வகுப்புகளை மூட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தனர். இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பேரலைத்தொற்றுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆன்லைன் கல்வி முறை, இப்போதைய பாதிப்பில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பாதுகாக்கும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.