தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் வேலைக்கும் TNPSC போட்டித்தேர்வுகள் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசுப்பேருந்துகளில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலைகளுக்கும் இனி TNPSC போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
TNPSC போட்டித்தேர்வுகள்
தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலைகளுக்கும் இனி தேர்வுகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் TNPSC மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
சென்னையில் உள்ள அடையாறு, திருவான்மியூர் பணிமனைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் மூன்று மாதங்களாக பணிக்கு வராத ஊழியர்களிடம் உரையாடினார். இது குறித்து பேசிய அவர், ‘இனி அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும். அதனால் தனிப்பட்ட நபருக்கு வேலை அளிப்பது சாத்தியமில்லை. எனக்கு வரும் மனுக்களில் 50% வேலைவாய்ப்புக்கானதாக இருக்கிறது. இதனால் பணிக்கு வராமல் இருப்பது நிர்வாகத்திற்கு பெரிய இழப்பு என்பதை ஊழியர்கள் உணர வேண்டும்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
இப்போது நீண்ட நாட்கள் பணிக்கு வராதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக போக்குவரத்துக் கழகங்கள் சுமார் 48 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்கினாலும் மக்களின் நலனுக்காக இலவச சேவைகளும் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதனை அறிந்து கொண்டு, பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரிடம் நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்’ என தெரிவித்துள்ளார்.