சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – 2 நாட்கள் நீட்டிப்பு!
சென்னையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவாக்சின் இரண்டாம் தவணை:
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் கடந்த மாதம் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!
அதன்படி மாநகராட்சி சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் முழு விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் இரண்டாம் தேவை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவாக்சின் இரண்டாம் தேவை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கு 23.06.2021 மற்றும் 24.06.2021 ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் துவக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி!
இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் 8,880 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25.06.2021 மற்றும் 26.06.2021 ஆகிய இரு தினங்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.