சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் துவக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வெகு நாட்களுக்கு பிறகு இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பேருந்து சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனாலும் ரயில்களில் பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் அரசின் இ -பதிவு கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா பரவும் அச்சத்தாலும் பொதுமக்கள் பயணங்களை தவித்தனர்.
தமிழக அரசின் ‘கல்பனா சாவ்லா’ விருது 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் ரயில்வே துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள போதும் சென்னை புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள், களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் போன்றோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு ரயில்களில் பயணம் செய்ய அரசு அனுமதித்தது. தற்போது தமிழகம் முழுவதும் அரசின் பெரும் முயற்சியாலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இதனால் அரசு ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து சில தளர்வுகளை மட்டும் அறிவித்து வருகிறது. அதில் புதிய தளர்வுகளாக சென்னையில் புறநகர் பகுதி ரயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் பயணிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . பெண்கள் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ரயில்களில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் எனவும் ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரத்தில் மட்டும் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.