தமிழகத்தில் 10ம் & 12ம் பொதுத்தேர்வு எழுதாதோருக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு பயிற்சிகள் துவக்கம்!

0
தமிழகத்தில் 10ம் & 12ம் பொதுத்தேர்வு எழுதாதோருக்கு முக்கிய அறிவிப்பு - சிறப்பு பயிற்சிகள் துவக்கம்!
தமிழகத்தில் 10ம் & 12ம் பொதுத்தேர்வு எழுதாதோருக்கு முக்கிய அறிவிப்பு - சிறப்பு பயிற்சிகள் துவக்கம்!
தமிழகத்தில் 10ம் & 12ம் பொதுத்தேர்வு எழுதாதோருக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு பயிற்சிகள் துவக்கம்!

தமிழகத்தில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது இத்தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பயிற்சிகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணையை வெளியிடப்பட்டது. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை திட்டமிட்டபடி பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி அன்று வெளியிட்டது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களில் பொதுத்தேர்வில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி தேர்வு எழுதாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி சிறப்பு துணைத் தேர்வு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதியும், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதியும் நடைபெற உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு மாணவர்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் மதுபானம் இல்லை? கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

மேலும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு உதவும் வகையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத, பங்கேற்காத மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சிகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது, மாவட்டத்தில் 16 பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத, பங்கேற்காத மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதனால் மாவட்டத்தில் உள்ள பொதுத்தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களும் இதில் கலந்து கொண்டு தங்களது கல்வியை தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!