TET தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறந்தவுடன் உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
TET தேர்வு:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் மட்டுமே அரசு தேர்வு செய்யும். ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும். இதற்காக ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவார்கள். தேர்வின் முடிவுகள் வெளியானதும் அரசு தகுதியானவர்களை ஆசிரியர் பணிக்கு நியமிக்கும். இதற்கு முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Tokyo Olympics 2021 – முதல் தங்கத்தை கைப்பற்றிய சீனா, நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!
ஆனால் மத்திய அரசு மத்திய மற்றும் மாநில ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் இதற்கு முன்னதாக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இனி பணி நியமனத்திற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். இதனால் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அரசு முன்னதாக அறிவித்தது.
ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பும் பாரதி – இன்றைய எபிசோட்!
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் ஆசிரியர் தகுதி தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்படவில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழகத்தில் கடந்தாண்டுகளில் TET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.