Tokyo Olympics 2021 – முதல் தங்கத்தை கைப்பற்றிய சீனா, நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்க பதக்கத்தை சீனா கைப்பற்றி உள்ளது. மேலும் ஹாக்கி தொடரில் நியூஸிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி அடுத்த போட்டிக்கு முன்னேறி உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்:
கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர். இவர்கள் 18 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இம்முறை கொரோனா அச்சத்திற்கு மத்தியில் போட்டிகள் நடைபெற உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது. போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ரயில்வேயில் எழுத்தர், கணக்காளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு – தமிழகத்தில் தேர்வு மையம்!
இந்நிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தி உள்ளது. இந்தியாவுக்காக ஹர்மன்பிரீத் சிங் (26 மற்றும் 33 வது நிமிடங்கள்) இரட்டை கோல் அடித்தார், எட்டு முறை முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணியில் ரூபீந்தர் பால் சிங் (10 வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்து அசத்தினார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை, கேன் ரஸ்ஸல் (6 வது நிமிடம்), ஸ்டீபன் ஜென்னஸ் (43 வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜூலை 25 அன்று ஆஸ்திரேலியாவுடன் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அடுத்த போட்டியில் விளையாட உள்ளது.
ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பும் பாரதி – இன்றைய எபிசோட்!
மறுபுறம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் – மனிகா பத்ரா இணை அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மிக்சட் டீம் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் இணை காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளது.