ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பும் பாரதி – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி, ஹேமாவை கண்ணம்மா வீட்டில் கொண்டு போய் விடுகிறார். ஹேமாவை பிரிந்த சோகத்தில் பாரதி ஏக்கத்துடன் செல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், முதலில் வெண்பாவை காட்டுகிறார்கள். பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து காரில் வந்ததை பார்த்த வெண்பா கோபத்துடன் சாந்தியிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அது எப்படிமா சேருவாங்க நாம தான் பிரிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோமே என சாந்தி கூற, ஹேமாவை சரி செய்ய கண்ணம்மா மட்டும் தான் ஒரே மருந்து என டாக்டர் சொன்னார்களாம், அதான் பாரதி இப்படி பண்றான்னு வெண்பா சொல்ல, உங்கள தான் ஹேமா அம்மா என்று பாரதி சொன்னாரே, கவலைய விடுங்க என சமாதானம் கூறுகிறார். அடுத்தது வேணுவும், சௌவுந்தர்யாவும் பாரதி எடுத்த முடிவு குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!
அப்போது பாரதி ஹேமாவை தூக்கிக்கொண்டு பெட்டியுடன் வர மீண்டும் அமெரிக்கா கிளம்பி விட்டாரா என அனைவரும் குழப்பத்துடன் உள்ளனர். அப்போது பாரதியிடம் எங்கே போற பாரதி என கேட்க, அந்த சமையல் அம்மாவிடம் ஹேமாவை விட போறேன் என சொல்கிறார். இதனை கேட்டு வேணு, சௌந்தர்யா, அஞ்சலி மகிழ்ச்சி அடைகின்றனர். நான் கொண்டு போய் விடுகிறேன் என சௌந்தர்யா சொல்ல இல்ல நானே போறேன் என பாரதி காரில் புறப்படுகிறார். போகிற வழியில் ஹேமா தூங்கி கொண்டிருக்க பாரதி ஹேமாவை பார்த்து புலம்பிக்கொண்டே வருகிறார். அம்மா பாசம் இல்லாமல் வளர்ந்ததால் உனக்கு அவள் பாசம் தேவைபடுகிறதா என கேள்வி எழுப்புகிறார்.
பின்னர் கண்ணம்மா வீடு வந்ததும், ஹேமாவை எழுப்புகிறார். ஹேமா கண்ணம்மா வீட்டை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். வீட்டு வாசல் சென்றதும் சமையல் அம்மா என கூப்பிடுகிறார். ஹேமா குரல் கேட்டு கண்ணம்மா வருகிறார். இருவரும் பார்த்துக் கொண்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அப்போது பாரதி ஹேமாவின் டிரஸ், மருந்துகள், புத்தகங்கள் ஆகியவற்றை காட்டுகிறார். ஹேமாவை பத்திரமாக பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என கண்ணம்மா சொல்கிறார். உடனே பாரதி இதில் பத்தாயிரம் இருக்கிறது என கண்ணம்மாவிடம் கொடுக்கிறார்.
இந்தியாவில் 20 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இது எதுக்கு என கண்ணம்மா கேட்க என் பொண்ணு இங்க இருக்க போற அதனால செலவிற்கு என சொல்ல, அதன் பிறகு நான் காசு வாங்க மாட்டேன் என கண்ணம்மா சொல்கிறார். இங்க என் பொண்ணும் இருக்க அவளை எப்படி பாத்துகிறேனோ அப்படி பாத்துப்பேன் என கண்ணம்மா சொல்லவும் பாரதி அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் பாரதி ஹேமாவை பிரிந்த வருத்தத்தில் சென்று வாசலில் நின்று டாட்டா சொல்கிறார். ஹேமாவும், கண்ணம்மாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Exams ku video potutu irukeenga apram yen intha maathiri seriel news lam potutu irukeenga..