தமிழக முதல்வரின் காப்பீடு திட்ட பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய்:
தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் தொடங்கியது. குறிப்பாக இந்த நோய் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகளையும், ஸ்டெராய்டு மருந்துகள் அதிகம் எடுத்து கொண்டவர்களையும், HIV, ரத்த புற்றுநோய் உள்ளவர்களை அதிகம் பாதிக்கும்.
இந்தியாவில் 50 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம் – பயணிகள் ஆர்வம்!!
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள இணை நோயாளிகளை இந்த நோய் தாக்கும். தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி வரை 2382 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் நேற்று வரை 144 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக கொரோனா நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அதே போல இந்த நோய்க்கும் காப்பிட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நோய்க்கான சிகிச்சை வழங்கப்படும் மருத்துவமனைகளில் மட்டுமே காப்பீட்டு திட்டம் மூலமாக இலவச சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவிற்கு முன்னதாகவே சில மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டம் மூலமாக ஜனவரி மாதம் முதல் ஜூன் 13 வரை 226 பேருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.