இந்தியாவில் 50 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம் – பயணிகள் ஆர்வம்!!
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2020 ஏப்ரலில் ரயில் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் இன்று முதல் கூடுதலாக 50 சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவை முழுமையாக தடை செய்யப்பட்டது. நாளடைவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி மாநிலங்கள் தோறும் ரயில் சேவை முழுமையாக இயக்கப்படாமல் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்க அரசு அனுமதி வழங்கியது. இதன் காரணமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் சிறப்பு ரயில்கள் மட்டுமே நாட்டில் இயங்கி வருகிறது.
SBI வங்கியில் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் தொகை – புதிய திட்டம் அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து மக்களை அதிக அளவில் தாக்கி வருகிறது. தற்போது வரை கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால் மாநிலங்கள் தோறும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் நாட்டில் 50 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயங்கவுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதை அடுத்து கரூர் பகுதி ரயில் நிலையத்தில் ரயில் முன் பதிவை மேற்கொள்ள மக்கள் ஆர்வமாக குவிந்து வருகின்றனர். இதற்கான முன்பதிவு நேற்று (ஜூன் 20) தொடங்கியது. நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் தாக்கம் செலுத்தி வரும் காரணத்தால் ரயில் சேவைகள் அனைத்தும் தக்க கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கி வருகிறது. மேலும் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.