தமிழகத்தில் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு – ரூ.4 லட்சம் வரை இழப்பீடு!
தமிழகத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் போது இந்த சிகிச்சை தோல்வியடைந்தால் சிகிச்சை மேற்கொண்ட ஆண், பெண் என இருபாலருக்கும் இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை:
பொதுவாக குழந்தைப்பேறு என்பது பெண்களுக்கு வரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெறுவது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மேலும் மக்கள் தொகையையும் அதிகப்படுத்துகிறது மற்றும் குழந்தைகளை வளர்ப்பதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு குடும்பக்கட்டுப்பாடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற கொள்கையை பின்பற்றி வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் 2 குழந்தைகளுக்கு பிறகு தாய்மார்கள், கணவன்மார்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது தோல்வியடைந்தால் சிகிச்சை மேற்கொண்ட பெண் மற்றும் ஆணுக்கு அரசு சார்பாக தகுந்த இழப்பீடு வழங்கப்படும். அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும் அந்த பெண் மீண்டும் கருவுற்றால் அந்த சிகிச்சை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் போது அந்த பெண்ணிற்கு உயிரிழப்பு ஏற்படும் போது நிவாரணம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதையடுத்து தற்போது இழப்பீடு தொகை உயர்த்துவது பற்றி தமிழக அரசு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை தோல்வியடையும் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.30,000 வழங்கப்பட்டது. தற்போது இந்த இழப்பீடு தொகையை ரூ.60,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்து விட்டால் ரூ.4 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.