1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை!
புதுவையில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் இந்த மாதம் இறுதியில் நடக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டு இறுதித்தேர்வுகள்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து அதற்கான தேதியையும் தெரிவித்து இருந்தது. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான தேதிகள் நெருங்கி வர உள்ள காரணத்தால் மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் எனவும், அதன் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 10 வகுப்பு பொது தேர்வுகள் மே 10 ஆம் தேதியில் இருந்து 30 வரை நடைபெற உள்ளது. 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளது.
இந்நிலையில் தற்போது புதுவை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற 25 ஆம் தேதி தமிழ் தேர்வும், 26 ஆம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் 29 ஆம் தேதி 1, 2 வகுப்பு மாணவர்களுக்கும் கணித தேர்வுகளும் நடைபெற உள்ளது என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.