தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பிப்.9ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதால், மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வுத்துறை முக்கிய முடிவு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருபவர்களான 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி, மாா்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என முன்னதாக தேர்வு கால அட்டவணை வெளியானது.

இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் – முழு விவரங்கள் இதோ!

இருப்பினும் கொரோனா 3வது அலை தாக்கம் காரணமாக திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.9 முதல் திருப்புதல் தேர்வு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ( பிப்.14) நடைபெறவிருந்த பிளஸ் 2 கணிதத் தோ்வு, 10ம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் சனிக்கிழமை அன்று வெளியானது. அப்பகுதி மாணவர்களுக்கு வாட்ஸ்-ஆப் வழியாக வினாத்தாள்கள் லீக் ஆனது. இந்த வினாத்தாள் வெளியானது குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பியது.

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு 2022 – தேர்வு பகுப்பாய்வு & மதிப்பாய்வு விவரங்கள் இதோ!

இந்த சர்ச்சை குறித்து ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை செய்யாறு பகுதியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானதை கண்டறிந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இந்த வகையில் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள்கள் லீக் ஆகி வருவதால் திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும், பொதுத்தேர்வு எழுத தயார்படுத்தவே மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!