இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் – முழு விவரங்கள் இதோ!

0
இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் - முழு விவரங்கள் இதோ!
இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் - முழு விவரங்கள் இதோ!
இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் – முழு விவரங்கள் இதோ!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் ஓய்வூதிய திட்டம் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழிலார்களுக்கு பிஎப் கணக்கு உள்ளது. இதன் மூலம் அவர்கள் பெறும் சம்பளத்தை பொறுத்து மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகையுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படுகிறது. பணி நிறைவிற்கு பிறகு இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு 2022 – தேர்வு பகுப்பாய்வு & மதிப்பாய்வு விவரங்கள் இதோ!

இந்த திட்டத்தில் வீட்டு வேலையாட்கள், தெருவோர வியாபாரிகள், தலைச்சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளை, செருப்பு தைப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சலவை தொழிலாளிகள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், கிராமப்புற நிலமற்ற தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ.3000 வழங்கப்படுகிறது.

Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இந்த திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான மாத வருமானம் ரூ.15000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டமாகும். மேலும் இதில் தொழிலாளர் காப்பீடு செய்தவர்கள் தகுதியற்றவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. இந்த அமைப்பு சாரா தொழிலாளி மாதம் தோறும் சந்தா செலுத்தி, 60 வயது வரை வழக்கமான பங்களிப்பைச் செலுத்தியிருந்தால் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 3000 கிடைக்கும். ஒரு வேளை தொழிலாளி இறந்தால் அவரது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50 சதவீதம் கிடைக்கும்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!