Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைவதன் மூலமாக கிடைக்கும் பல்வேறு பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்கள் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதால் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகையை பெற முடிகிறது. அத்துடன் இதில் சேமிப்பதால் நிலையான வருமானங்கள் கிடைக்கும். இந்த தொகை கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும் பொருளாதார ரீதியில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட் – கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா!
மேலும் இதில் 100 ரூபாய் முதல் சேமிக்க முடியும் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட பெருமளவு இணைகின்றனர். இந்த சேமிப்பு திட்டத்தில் தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த முதிர்வு காலத்தை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து கொள்ளலாம்.
லட்சுமி & ஹேமாவுடன் குடும்பமாக இணைந்த பாரதி – ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!
இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை உள்ளிட்ட பலன்களும் கிடைக்கிறது. இதில் தற்போது 25 வயதுடையவர் ரூ.4500 யை மாத தொகையாக செலுத்தி வருகிறார். அதன்படி தினமும் 150 ரூபாய் சேமிக்க வேண்டும். அத்துடன் ஒரு ஆண்டுக்கு ரூ.54,000 செலுத்த வேண்டும். அதேபோல் 20 ஆண்டுக்கு ரூ.10.80 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தின் முடிவில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு முடிவில் ரூ.20 லட்சம் பெற முடியும். இவ்வாறு குறைந்த நாட்களில் அதிக தொகையை பெற முடியும் என்பதால் அதிகளவு முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் இணைகின்றனர்.