TCS, Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்த பிறகும் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அனுமதிக்கின்றனர். இதையடுத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பை பற்றி பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த தனது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. அத்துடன் அவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு பணிபுரிய இன்டர்நெட், கணினி உள்ளிட்ட தேவைகளையும் நிறுவனங்கள் வழங்கினர். அதன்படி கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
TN Job “FB Group” Join Now
ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி செய்ய விரும்புகின்றனர். இதற்கிடையே முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை WORK FROM HOME செய்ய அனுமதிக்கின்றனர். ஆனால் இதில் சில நிறுவனங்கள் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் Infosys நிறுவனங்கள் 3 கட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிறுவனத்திற்கு அருகில் இருக்கும் ஊழியர்களை வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகத்திற்கு வர வேண்டும்.
அடுத்ததாக ஊழியர்களை மேம்பாட்டு மையங்களுக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து HCL நிறுவனம் ஹைபிரிட் பணி மாடலை பின்பற்றி வருகிறது. அத்துடன் ஊழியர்களின் குடும்பம் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப கலப்பின மாதிரியில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக HCL நிறுவனம் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் 40 நிறுவனங்களில் 30 % நிறுவனங்களில் தற்போதும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.