தொழிலில் முன்னேறும் கதிர், குத்திக்காட்டி பேசிய மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் வீட்டை விட்டு சென்றதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. இந்நிலையில் கதிர் எல்லார் சொல்லியும் கேட்காமல் தனியாக சென்றுவிடுகிறார். அடுத்து வரும் எபிசோடுகளில் கதிர் தனியாக பிசினஸ் தொடங்க இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டில் முல்லை மருத்துவ செலவிற்காக கடன் வாங்கியதால் வீட்டில் பெரிய பிரச்சனை வருகிறது. கதிர் தன்மானம் தான் முக்கியம் என நினைத்து முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அவருக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்ல குடும்பத்தில் அனைவரும் பதட்டமடைகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஆப்ரேஷனிற்கு 2 லட்சம் தேவை என சொல்ல மீனாவின் அப்பா பணம் கொடுத்து உதவி செய்கிறார். கதிருக்கு கண்ணன் தகவல் சொல்ல பதறி போய் கதிர் வருகிறார். தனம் கதிரை வீட்டிற்கு வர சொல்ல கதிர் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். இனி அடுத்து வரும் எபிசோடுகளில் கதிர் தனியாக சென்று கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு பார்க்கிறார். மூர்த்தி வீட்டிற்கு வந்து எல்லாம் இயல்பு நிலைக்கு வருகிறது. ஆனால் கதிர் முல்லை இல்லாமல் குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கதிர் கஷ்டப்பட்டு வேலை செய்து அதில் வந்த பணத்தை வைத்து புதிதாக தொழில் தொடங்க இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை பார்த்து மீனாவின் அப்பா ஜீவாவிடம் குத்திக்காட்டி பேசுகிறார். உங்க தம்பி புத்திசாலித்தனமாக இருக்கிறார். ஆனால் நீங்க குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு இப்படி எதுவும் இல்லாமல் இருக்கீங்க என சொல்லி காட்ட அதனால் பிரச்சனை வர இருக்கிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.