ரயில்வே பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு – அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்!
டிக்கெட்களை ரத்து செய்த பணத்தை திருப்பியனுப்பும் முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், IRCTC போன்று எந்த அழைப்புகள் வந்தாலும் அதனை நம்பி ஏமாற வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
IRCTC:
ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அவ்வப்போது பலவிதமான புதிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், சில காரணங்களால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் போது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு கால தாமதம் ஆகும். ஆனால், தற்போது கூடிய விரைவிலேயே பணத்தை திரும்ப பெறுவதற்கான புதிய சேவைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, IRCTC ipay மூலமாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்தவுடன் அதற்கான IRCTC ipay Refund தொகை உடனடியாக உங்களது வங்கி கணக்கிற்கே அனுப்பி வைக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், சில மோசடிகள் நடைபெறுவதாகவும் பயணிகள் குற்றசாட்டு வைத்துள்ளனர். அதாவது, டிக்கெட்களை ரத்து செய்த பணத்தை திருப்பியனுப்பும் முறையில் ரயில்வே துறையிலிருந்து பேசுவதாக கூறி சில மோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், உங்களது டெபிட் , கிரெட் கார்டு, யுபிஐ ஸ்கேன் கோடு அனுப்புங்கள் இப்பொழுதே IRCTC ipay Refund தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வருகிறது. இது உண்மை என நம்பி பலரும் ஏமாந்து போயிருக்கின்றனர்.
ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – IRCTCயின் புதிய வசதி அறிமுகம்!
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, UPI ஐடியை பயன்படுத்தி பயணிகளிடம் இருந்து நிதி மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால், சந்தேகத்தை அளிக்கும்படியான எந்தவொரு அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம் எனவும், ரயில்வே பணத்தை திரும்ப பெறும் நடைமுறையில் ஊழியர்கள் ஒரு போதும் உங்களுக்கு கால் செய்ய மாட்டார்கள் எனவும் தேவையற்ற அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எண், OTP, ATM பின், CVV எண் அல்லது பான் எண், பிறந்த தேதி ஆகிய எந்த விவரங்களையும் ஐஆர்சிடிசி கேட்காது என்பதை பயணிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.