தமிழக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனவே தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இந்நிலையில் தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கல்வி ஆண்டின் ஆரம்ப நாள் முதல் அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் நாள் வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் அடிப்படையில் 80%க்கு மேல் வருகை புரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 75 % முதல் 80% வரை வருகை புரிந்தவர்களுக்கு 1 மதிப்பெண்ணும் வழங்க வேண்டும்.
அதேபோல் மாணவர்களின் திறன்களை சோதிக்கும் வகையில் உள்நிலைத் தேர்வுகள் 4 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதற்குரிய வினாத்தாள்கள், வகுப்பு ஆசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு 45 நிமிடங்கள் வரை நடைபெறலாம். 25 மதிப்பெண்களுக்கு சூழ்நிலை தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கடைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு!
மேலும் மாணவர்களின் திறன்களை சோதிக்கும் வகையில் உள்நிலைத் தேர்வுகள் 4 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதற்குரிய வினாத்தாள்கள், வகுப்பு ஆசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு 45 நிமிடங்கள் வரை நடைபெறலாம். 25 மதிப்பெண்களுக்கு சூழ்நிலை தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்த வினாத்தாள், விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அகமதிப்பீடு வழங்கும்போது ஆசிரியர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் தலைமையாசிரியர் மாணவர்களுக்காக மதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குவதை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா கூறியுள்ளார்.