தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கடைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் மக்கள் பொருட்கள் பெரும் விதமாக மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் கூடுதலாக இரவு 7 மணி வரை இயங்கி வருகின்றன என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியுள்ளார்.
ரேஷன் கடைகள்:
நாடு முழுவதும் நாளை நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையானது அனைவருக்கும் பொதுவான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி நேரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர்.
நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு – தேவஸ்தானம் அறிவிப்பு!
ஆனால் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்த அந்த நேரங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டது மக்களிடையே மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அனைவரும் புத்தாடை எடுப்பது, மளிகை பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி வருவார்கள். இந்த நிலையில் கட்டுப்பாடுகள் விதித்தால் அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ.5) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு மக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கையிருப்பில் உள்ளது. தீபாவளிக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கனமழை எதிர்கொள்வதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியுள்ளார்.