நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு – தேவஸ்தானம் அறிவிப்பு!
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காரணமாக நவம்பர் 15ம் தேதி நடைதிறக்க இருப்பதாகவும், அது தொடர்பான விவரங்களையும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலை நடைதிறப்பு:
பொதுவாக மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை மாதந்தோறும் திறக்கப்படும். கடந்த மாதங்களில் அங்கு அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வந்த காரணத்தால் சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் முன்னதாக அறிவித்துள்ளது. ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்களுக்கு சபரிமலை செல்ல அனுமதி ரத்து செய்யப்ட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ.5) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்நிலையில், சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று (நவம்பர் 2) திறக்கப்பட்டது. இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும். இன்று நடக்கும் சிறப்பு பூஜைக்கு 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும்.
நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு, 92% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அரசு தகவல்!
நவம்பர் 16ம் தேதி முதல் தினமும் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கட்டாயமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அளித்துள்ளது.