இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்கள் – முதல்வரின் வலியுறுத்தல்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய கோரிக்கை ஒன்றை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் வைத்துள்ளார்.
முதல்வரின் வலியுறுத்தல்:
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாட்டின் தலைநகரான டெல்லியின் முதல்வர் பதவியில் உள்ளார். இவரது ஆட்சி காலத்தில் மாநிலத்தில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கெஜ்ரிவால் அவர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, இந்திய ரூபாய் நோட்டுகளில் தற்போது உள்ளது போல் ஒரு புறம் தேசத்தந்தை காந்தியின் படம் இருக்கட்டும் என்றும், ஆனால் மற்றொரு புறம் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் படங்களை அச்சிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தெய்வங்களின் ஆசியுடன் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையை அடையும் என்றும், இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் மொத்த இந்து மக்கள் 2% மட்டுமே உள்ள நிலையில், அவர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை வைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் – வெளியான சூப்பர் அப்டேட்!
Exams Daily Mobile App Download
இதனால், நாமும் இதனை செய்து கடவுளின் ஆசியுடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்று கூறியுள்ளார். மேலும், இதனை உடனடியாக இல்லாவிட்டாலும், புதிய நோட்டுகளில் அச்சிட ஆரம்பித்து படிப்படியாக புழக்கத்தில் விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.