2024 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் – வெளியான சூப்பர் அப்டேட்!
அயோத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோவில் பக்தர்களுக்கு திறக்கப்படும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில்:
உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் கட்டுமான பணிகள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதால் அதற்காக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் போடப்படும். அதன் பின் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும். பின் அதே மாதத்தில் பக்தர்களுக்கு கோவில் திறக்கப்படும்.
வாட்ஸ் அப் முடங்கியதற்கு காரணம் இதுதான் – அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட மெட்டா நிறுவனம்!
Exams Daily Mobile App Download
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் 70 ஏக்கர் நிலத்துக்குள் வால்மீகி, கேவத், சபரி, ஜடாயு, சீதை, விநாயகர், லட்சுமணன் ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக கோவில் பக்தர்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.