தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – பொருட்களை விற்றால் குற்றம்! ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் வாங்கும் உணவு பொருட்களை வெளியில் விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ரேஷன் கார்டு
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்ய முடிகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் தங்களின் கையொப்பமிட்டு பொருட்களை பெற்று வருகின்றனர். அத்துடன் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் கடைக்கு வர முடியாத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் பொருட்களை பெற்று சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறியதாவது, ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் கார்டு மூலமாக வழங்கப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்துடன் தங்களின் ரேஷன் பொருட்களை வெளியில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது அத்தியாவசிய பண்டகங்கள் சட்டம் 1955-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்களின் ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.