தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில் நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தால் மட்டும் போதும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளும் இயங்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு இந்த இரண்டு ஆண்டுகளுமே பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் நாளை (மே 5ம் தேதி) கடைகளுக்கு விடுமுறை – பேரவை தலைவர் அறிவிப்பு!
பின்பு தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தினால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்விற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாத காரணத்தினால் 35% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படுமா எனவும் சந்தேகம் இருந்தது.
Exams Daily Mobile App Download
அதற்கு அரசும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கேள்வி இடம்பெறும் என அறிவித்திருந்தது. இதன்படி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்தனர். இதற்கு நடுவே தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் துவங்கியதனால் கட்டாயமாக பொதுத்தேர்வு நடைபெறுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா எனவும் கேள்விகள் எழுந்தன. கட்டாயமாக சொன்ன தேதியில் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு எழுத உள்ளதால் மாணவர்களும் பதட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் நாளை காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தால் போதும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.