ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!
மத்திய அரசின் தோட்டக்கலை மேலாண்மை மற்றும் ஸ்டார்ட்-அப் (BESST-HORT) நிறுவனத்தில் இருந்து Business Executive பதவிக்கு புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IIHR |
பணியின் பெயர் | Business Executive |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
BESST-HORT நிறுவனத்தில் Business Executive பதவிக்கு என 02 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பதிவு செய்வோரில் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
BESST-HORT கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் MBA/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- MS Office, Content Writing ஆகிய பணிகளில் நல்ல அனுபவமும், திறனும் கொண்டிருக்க வேண்டும்.
BESST-HORT ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.