தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் – தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்புவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியர் சங்கம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணாமாக அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரிகளால் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 14-வது மாநாடு நேற்று சங்க கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற முதல்வரின் தனிப்பிரிவில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்த மாநாட்டில் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அம்மாநாட்டில் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தர அரசு ஊழியராக நியமிக்க வேண்டும். மேலும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
Post Office சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1500 முதலீட்டில் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ்!
அதனை தொடர்ந்து மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்தூக்கி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு அலுவலர் குடியிருப்புகளை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே கூடிய விரைவில் அரசுத் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிது.