தமிழகத்தில் ‘நீரஜ்’ என்ற பெயர் இருந்தால் 2 லி பெட்ரோல் இலவசம் – இந்தியன் ஆயில் நிறுவனம்!
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனை நீரஜ் சோப்ராவை பாராட்டும் வகையில் ‘நீரஜ்’ என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த ஆபர் வழங்கப்படுகிறது.
பெட்ரோல் இலவசம்:
ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜெர்மனி, பெலாரஸ், பாகிஸ்தான் போன்ற நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டார். இதன் தகுதிச் சுற்றில் 86.65 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதே உத்வேகத்துடன் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார்.
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!
இவர் இறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இரண்டாம் ஆட்டத்தில் 7.58 மீட்டர் என தொடர்ந்து அடுத்தடுத்து சுற்றுகளில் முன்னிலை வகித்தார். அதிகபட்சமாக 87.58 மீட்டர் என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது.
அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் – உயர்கல்வித்துறை அமைச்சர்!
தமிழகத்தில் நீரஜ் சோப்ராவை பாராட்டும் வகையில் கரூர் மாவட்டத்தில் சுங்க கேட் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் ‘நீரஜ்’ என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளது. நீரஜ் என்ற பெயர் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் பெற வரும் போது தங்கள் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நீரஜ் என பெயர் உள்ளவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.